''நடிகவேள் எம்.ஆர்.ராதா எந்த அதிகாரங்களைக் கண்டும் அஞ்சாதவர். தன் மனதில் பட்டதைச் சொல்லும் சுபாவத்துக்குச் சொந்தக்காரர்.
அவர் இம்பாலா காரில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு ஊர்வலம் வந்த கதை பலருக்கும்
தெரியும். அதே இம்பாலா காரை, அப்போதைய குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன்
சென்னை வந்தபோது, அவரை அழைத்து வருவதற்காக எம்.ஆர்.ராதாவிடம் சில
அதிகாரிகள் கேட்டிருக்கிறார்கள். 'இந்த ராதாகிருஷ்ணன் போவதற்காகத்தான்
கார். அந்த ராதாகிருஷ்ணனுக்காக இல்லை' என்று துணிச்சலாக மறுத்தவர்.
அண்ணா, பெரியாரைவிட்டுப் பிரிந்தபோது 'அண்ணாவின் அவசரப் புத்தி' என்று
புத்தகம் எழுதி, அவரிடமே கொண்டுபோய்க் கொடுத்தார். 'நீங்களா எழுதினீர்கள்?'
என்று அண்ணா கேட்க, 'எனக்குத்தான் எழுதத் தெரியாதே, நான் சொல்லச் சொல்ல
எழுதினது. யார் எழுதினால் என்ன?' என்றார்.
அந்தக் காலகட்டத்தில் கட்சியில் இருந்தவர்களுக்கு ஒளி வட்டம்
சூட்டப்படுவதைக் கடுமையாக எதிர்த்தவர் ராதா. அண்ணா, திராவிடர் கழகத்தில்
'தளபதி' எனத் தொண்டர்களால் அழைக்கப்பட்டவர். ஒருமுறை அவர் நாடகத்துக்கு
அண்ணா வந்திருந்தபோது, மேக்கப் ரூமில் இருந்த ராதாவிடம் 'தளபதி
வந்திருக்கிறார்' என்று அவசர அவசரமாகச் சொல்லியிருக் கிறார்கள். 'தளபதி
குதிரையை எங்கே நிறுத்திட்டு வந்திருக்கார்?' என்று நக்கலாகக் கேட்டாராம்
ராதா.
ஓசியில் நாடகம் பார்க்கும் வி.ஐ.பி-க்களையும், 'காசு
கொடுத்து டிக்கெட் வாங்கினவன்லாம் தரையிலே உட்கார்ந்திருக்கான். ஓசியிலே
வந்தவன்லாம் சேர்ல உட்காந்திருக்கான்' என்று நாடக மேடையிலேயே
கலாய்ப்பாராம்! "
''நடிகவேள் எம்.ஆர்.ராதா எந்த அதிகாரங்களைக் கண்டும் அஞ்சாதவர். தன் மனதில் பட்டதைச் சொல்லும் சுபாவத்துக்குச் சொந்தக்காரர்.
அவர் இம்பாலா காரில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு ஊர்வலம் வந்த கதை பலருக்கும் தெரியும். அதே இம்பாலா காரை, அப்போதைய குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் சென்னை வந்தபோது, அவரை அழைத்து வருவதற்காக எம்.ஆர்.ராதாவிடம் சில அதிகாரிகள் கேட்டிருக்கிறார்கள். 'இந்த ராதாகிருஷ்ணன் போவதற்காகத்தான் கார். அந்த ராதாகிருஷ்ணனுக்காக இல்லை' என்று துணிச்சலாக மறுத்தவர்.
அண்ணா, பெரியாரைவிட்டுப் பிரிந்தபோது 'அண்ணாவின் அவசரப் புத்தி' என்று புத்தகம் எழுதி, அவரிடமே கொண்டுபோய்க் கொடுத்தார். 'நீங்களா எழுதினீர்கள்?' என்று அண்ணா கேட்க, 'எனக்குத்தான் எழுதத் தெரியாதே, நான் சொல்லச் சொல்ல எழுதினது. யார் எழுதினால் என்ன?' என்றார்.
அந்தக் காலகட்டத்தில் கட்சியில் இருந்தவர்களுக்கு ஒளி வட்டம் சூட்டப்படுவதைக் கடுமையாக எதிர்த்தவர் ராதா. அண்ணா, திராவிடர் கழகத்தில் 'தளபதி' எனத் தொண்டர்களால் அழைக்கப்பட்டவர். ஒருமுறை அவர் நாடகத்துக்கு அண்ணா வந்திருந்தபோது, மேக்கப் ரூமில் இருந்த ராதாவிடம் 'தளபதி வந்திருக்கிறார்' என்று அவசர அவசரமாகச் சொல்லியிருக் கிறார்கள். 'தளபதி குதிரையை எங்கே நிறுத்திட்டு வந்திருக்கார்?' என்று நக்கலாகக் கேட்டாராம் ராதா.
ஓசியில் நாடகம் பார்க்கும் வி.ஐ.பி-க்களையும், 'காசு கொடுத்து டிக்கெட் வாங்கினவன்லாம் தரையிலே உட்கார்ந்திருக்கான். ஓசியிலே வந்தவன்லாம் சேர்ல உட்காந்திருக்கான்' என்று நாடக மேடையிலேயே கலாய்ப்பாராம்! "
அவர் இம்பாலா காரில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு ஊர்வலம் வந்த கதை பலருக்கும் தெரியும். அதே இம்பாலா காரை, அப்போதைய குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் சென்னை வந்தபோது, அவரை அழைத்து வருவதற்காக எம்.ஆர்.ராதாவிடம் சில அதிகாரிகள் கேட்டிருக்கிறார்கள். 'இந்த ராதாகிருஷ்ணன் போவதற்காகத்தான் கார். அந்த ராதாகிருஷ்ணனுக்காக இல்லை' என்று துணிச்சலாக மறுத்தவர்.
அண்ணா, பெரியாரைவிட்டுப் பிரிந்தபோது 'அண்ணாவின் அவசரப் புத்தி' என்று புத்தகம் எழுதி, அவரிடமே கொண்டுபோய்க் கொடுத்தார். 'நீங்களா எழுதினீர்கள்?' என்று அண்ணா கேட்க, 'எனக்குத்தான் எழுதத் தெரியாதே, நான் சொல்லச் சொல்ல எழுதினது. யார் எழுதினால் என்ன?' என்றார்.
அந்தக் காலகட்டத்தில் கட்சியில் இருந்தவர்களுக்கு ஒளி வட்டம் சூட்டப்படுவதைக் கடுமையாக எதிர்த்தவர் ராதா. அண்ணா, திராவிடர் கழகத்தில் 'தளபதி' எனத் தொண்டர்களால் அழைக்கப்பட்டவர். ஒருமுறை அவர் நாடகத்துக்கு அண்ணா வந்திருந்தபோது, மேக்கப் ரூமில் இருந்த ராதாவிடம் 'தளபதி வந்திருக்கிறார்' என்று அவசர அவசரமாகச் சொல்லியிருக் கிறார்கள். 'தளபதி குதிரையை எங்கே நிறுத்திட்டு வந்திருக்கார்?' என்று நக்கலாகக் கேட்டாராம் ராதா.
ஓசியில் நாடகம் பார்க்கும் வி.ஐ.பி-க்களையும், 'காசு கொடுத்து டிக்கெட் வாங்கினவன்லாம் தரையிலே உட்கார்ந்திருக்கான். ஓசியிலே வந்தவன்லாம் சேர்ல உட்காந்திருக்கான்' என்று நாடக மேடையிலேயே கலாய்ப்பாராம்! "



.jpg)
கிராமம்.
நான்தான் வீட்டுக்கு மூத்த மகன். ஒரு தங்கச்சி இருக்கிறா. அப்பா, அம்மா கூலி
வேலைக்குப் போய்தான் எங்க ரெண்டு பேரையும் படிக்கவெச்சாங்க. எனக்கு இப்ப 16 வயசு
ஆகுது. நான் சின்ன வயசுல நல்லா, அழகா இருந்தேனு எங்க அம்மா சொல்வாங்க. அதனால்,
அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லோரும் தூக்கிட்டுப் போயிடுவாங்களாம். வயசு
கூடக் கூட ஆள் வளருவானானு பார்த்தாங்களாம். என் கூட்டாளிங்க எல்லாம் பனை மரம்
மாதிரி வளர்ந்துட்டாங்க. நான் ஒண்ணே முக்கால் அடிதான் வளந்தேன்.
எனக்கு
கிரிக்கெட் ரொம்பப் பிடிக்கும். சாயந்திரம் வீட்டுக்கு வந்துட்டா, என்னோட
ஃப்ரெண்ட்ஸ்கூட கிரிக்கெட் ஆடுவேன். ஆனா, என்னைவிட பேட் உயரம்கிறதால சொந்தமாக ஒரு
சின்ன பேட் செஞ்சுக்கிட்டேன். பந்து எல்லோருக்கும் ஒண்ணுதான். நான் ஒன்பதாம்
வகுப்பு படிக்கும்போது எங்க பக்கத்து வீட்டு தாத்தா பறை அடிக்கக் கத்துக்
கொடுத்தார். அதில் இருந்து எனக்கு பறை அடிக்கிற ஆர்வம் அதிகமாகிடுச்சு. வீட்டில்
இருக்கும் சாப்பாட்டுத் தட்டையே பறை மாதிரி வெச்சு அடிச்சுட்டு இருப்பேன்.
'எனக்கு இசை கத்துக்க ரொம்ப ஆர்வமா இருக்கு' னு சொல்லி அம்மா, அப்பாவைக் கூட்டிட்டு
வந்து சேலம் கலெக்டரைப் பார்த்தேன். அவரும் 'எங்கே பறை அடிச்சுக் காட்டு’ன்னார்.
சூப்பரா அடிச்சிக் காட்டினேன். அவர் என்னை சேலம் அரசு இசைப் பள்ளியில்
சேர்த்துவிட்டாரு. மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையும் கொடுப்பதாகச் சொல்லி
இருக்காங்க.

.jpg)


கொளத்தூர்
என்ற கிராமத்தில் 'சிலைக்காரன் மற்றும் தாத்தா- பாட்டி’ நடுகற்கள் இருக்கின்றன.
இவற்றில் சிலைக்காரனின் கையில் கேடயம் இருக்கிறது. இவனும் வேடியப்பனைப்போல வாழ்ந்து
இருக்கலாம். வாய்வழிக் கதையாக நாம் அறிவது, இந்தச் சிலைக்காரன் என்பவன், அந்தக்
கிராமத்தில் இருந்த வீரம் பொருந்திய மாவீரன்; கிராமத்துக்குச் சொந்தமான ஏரி
உடைந்ததால், அந்தப் பாதிப்பில் இருந்து மக்களைக் காப்பாற்ற பலி கொடுக்கப்பட்டதாகச்
சொல்கின்றனர்.
பொலக்குணம்
என்ற கிராமத்தில் முனியப்பனுக்கு 'நடுகல்’ உள்ளது. தமிழ்நாட்டிலேயே முனியப்பனுக்கு
உருவத்துடன் இருக்கும் நடுகல் இதுவாகத்தான் இருக்கும். நடுகற்களை முழுமையாக
ஆராய்ந்தால் மறைந்துகிடக்கும் தமிழரின் தொன்மையான வரலாறுகளை மீட்டெடுக்க
முடியும். மக்களின் கலாசாரத்தையும், சடங்குகளையும், வாழ்வியல் முறைகளையும் பற்றி
தெரிந்துகொள்ளலாம்'' என்கிறார் உறுதியான குரலில் சுதாகர்!


சென்னையில் குழந்தைகள் நலன்குறித்து தொடர்ந்து இயங்கிவரும்
கல்வியாளர் ஆயிஷா நடராஜன் ஆதங்கத்தோடு சில ஆலோசனைகளைச் சொன்னார். ''ஊட்டச்சத்துக்
குறைபாட்டுக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றில் குடும்பத்தின் பொருளாதாரச்
சூழல், குடும்பத்தில் பெண்களுக்கும் அவர்கள் கல்விக்கும் அளிக்கப்படும்
முக்கியத்துவம் ஆகியவற்றை முக்கியமானதாகக் கூறலாம். இந்தப் பிரச்னையை ஒரே கோணத்தில்
பார்க்காமல் பல்வேறு கோணத்தில் பார்க்க வேண்டும். ஐ.நா. சபையின் யுனிசெஃப்
கொடுக்கும் அறிக்கையில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது. அரசின் அறிக்கையே
இப்படி இருக்கிறது என்றால், வேறு ஒரு சுதந்திரமான அமைப்போ, அல்லது நிறுவனமோ ஆய்வு
செய்தால் இன்னும் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியேவரும். கல்வி உரிமைச் சட்டம் ஆறு
வயது முதல் 14 வயதுவரை உள்ளவர்களைக் குழந்தைகள் எனச் சொல்கிறது. குழந்தைகள் கல்வி
கற்கும் வயதை ஏன் ஆறில் இருந்து தொடங்கவேண்டும்? மூன்றரை வயதில் இருந்தே குழந்தை
கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறது. ஆனால், பிறந்ததில் இருந்து ஐந்து வயதுவரை குழந்தைகள்
நலனில் அரசு கவனம் செலுத்துவது இல்லை. இலவச மருத்துவ வசதி இருந்தால் அதிகக்
குழந்தைகள் வயிற்றுப்போக்கால் இறந்துபோகும் துர்பாக்கியம் நிகழாமல் இருக்கும்.
அங்கன்வாடி மையங்களில்தான் ஆறு வயதுவரை உள்ள குழந்தைகள் நாள் முழுக்க
இருக்கிறார்கள். ஆனால், அந்த மையம் இயங்கும் விதம், சத்துணவின் தரம் குறித்துக்
கண்காணிக்க எந்த அமைப்பும் இல்லாததால் நிறைய ஓட்டைகள் ஏற்படுகின்றன.
பொருளாதார மேதை அமர்த்தியாசென், மூன்றாம் உலக நாடுகள் தங்களை
வளர்ச்சி அடைந்த நாடுகளாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்கிற அவசரத்தில் இழைக்கும்
பெரிய தவறு, ராணுவ தளவாடங்களுக்கு அதிக நிதியை ஒதுக்குவதுதான். அதில் ஒரு சதவிகித
நிதியைக் குழந்தைகள் நலனுக்காக ஒதுக்கினாலே ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்கலாம்.
இனிமேலாவது குழந்தைகளுக்கு என்று பட்ஜெட் தாக்கலில், நிதி ஒதுக்க வேண்டும். சுகாதார
வசதிசெய்து கொடுப்பவர்கள், குடிநீர் வழங்கும் பொறுப்பில் உள்ளவர்கள், அங்கன்வாடி
ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என எல்லோருமே தங்கள்
பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இப்படி ஒவ்வொருவரும் குழந்தைகள் நலன் மீதான
அக்கறையுடனும் பொறுப்பு உணர்வுடனும் நடந்துகொண்டாலே ஊட்டச்சத்துக் குறைபாட்டுப்
பிரச்னைக்கு எளிதில் தீர்வு கண்டுவிடலாம்'' என்றார்.


சுதேசி மன்னர்கள், தங்களது ராஜ்ஜியத்தின் வெளியுறவு, பாதுகாப்பு இரண்டையும் ஆங்கிலேயருக்கு விட்டுக்கொடுத்துவிட்டு உள்ளாட்சியை மட்டுமே தமதாக்கி இருந்தனர்.
இப்படி, ஆண்டு முழுவதும் சாப்பிட்டுவிட்டு உடம்பு இளைப்பதற்காக ஒரு மாதம் வெறும் எலுமிச்சை சாற்றை மட்டுமே அருந்துவார். எடை குறைந்தவுடன் மீண்டும் உணவு வேட்டை தொடங்கிவிடும். ராம்பூர் நவாப், கன்னிப் பெண்களாகத் தேடித்தேடி சுகித்து அவர்களின் மூக்குத்திகளை நினைவுச் சின்னமாக சேகரித்துக்கொள்வார். அவரிடம் ஆயிரக்கணக்கான மூக்குத்திகள் இருந்தன. டோல்பூர் மன்னருக்கு, சீட்டு விளையாட்டுதான் உலகம்.
இவருக்கு நாய்கள் என்றால் உயிர். அவரிடம் 800 நாய்கள் இருந்தன. ஒவ்வொரு நாய்க்கும் ஒரு தனி இடம், பராமரிப்பதற்குத் தனி ஆள், மன்னர் நினைத்த நேரம் நாயைக் கொண்டுவருவதற்காக ஒவ்வொரு நாயின் இருப்பிடத்துக்கும் ஒரு போன் இணைப்பு, அத்துடன் நாய்களுக்கான விசேஷ உடைகள், அலங்கார மணிகள், முத்து மாலைகள் ஆகியவை வைத்து இருந்தார். ஏதாவது ஒரு நாய் இறந்துவிட்டால், அதன் நினைவாக சலவைக்கற்களால் மண்டபம் கட்டப்படும். நாய்களை நேசித்த அளவில் ஒரு பங்குகூட அவர் தனது ராஜ்ஜியத்தில் இருந்த மக்களை நேசிக்கவில்லை. அவரது படுக்கையில் அவரோடு தூங்குவதற்கு என்றே சில நாய்களை வைத்து இருந்தார். அவற்றைக் கட்டிக்கொண்டுதான் நவாப் தூங்குவார்.
ஒ
பொதுவாக, தேனீக்கள் தேன்கூட்டில் இருந்து 5 கி.மீ. சுற்றளவு வரை பறந்து சென்று, பூக்களில் தேனைச் சேகரித்துக் கூடு திரும்பும். லட்சக்கணக்கில் தேனீக்கள் பறந்தாலும் அந்தந்தத் தேனீ, அதனதன் கூட்டுக்குத் திரும்பக் காரணம், பூமியின் மின் காந்த அலைகள்தான். அந்த அலைகளை உணர்வதன் வழியாகத்தான் ஒரு தேனீ, சரியாகக் கூட்டை அடைகிறது. ஆனால், செல்போன் கோபுரங்களின் அலைவீச்சு இந்த மின் காந்த அலைகளைச் சிதறடிக்கிறது. இதனால் தேனீக்களால் சென்ற வழியில் கூடு திரும்ப முடியவில்லை. கூட்டம் கூட்டமாகச் செத்து மடிகின்றன. இதற்கு 'காலனி கொலாப்ஸ் டிசார்டர்’ (Colony collapse disorder) என்று பெயரிட்டு இருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
தமே செய்யப்படாமல் ஒரு பொருளை வருடக்கணக்கில் பயன்படுத்துகிறோம் என்றால், அது செல்போனாகத்தான் இருக்கும். நாள் ஒன்றுக்குப் பல மணி நேரம் செல்போனைப் பயன்படுத்துகிறோம். வாய்க்கு அருகில் வைத்துப் பேசிக்கொண்டே இருக்கிறோம். எவ்வளவு அழுக்காக இருந்தாலும் செல்போனை உபயோகிக்கத் தயங்குவது இல்லை. அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தின் மைக்ரோபயாலஜி துறை பேராசிரியர் சார்லஸ் கெர்பா என்பவர் நம் சுற்றுப்புறச் சூழலில் வசிக்கும் கிருமிகள்குறித்து ஆய்வு நடத்தினார். முடிவாக அவர் கண்டறிந்த உண்மை... நம் கழிப்பறைகளைவிட செல்போன்களில்தான் அதிகக் கிருமிகள் இருக்கின்றன!
'இந்தப் பாட்டை உங்களுக்குப் பிடிச் சிருந்தா, உடனே இரண்டை அமுக்குங்க’னு சொன்னது அந்த போன் குரல். எனக்கும் அந்த பாட்டைப் பிடிச்சுத்தான் இருந்துச்சு. ரெண்டை அமுக்கினேன். உடனே குறுந்தகவல் வந்துச்சு... 'உங்க பேலன்ஸ்ல இருந்து ரூபாய் முப்பது பிடிச்சிருக்கோம்’னு!






