
ஆள் வளர்ந்தால் மட்டும் போதாது. அறிவும் பொறுப்புகளும் வளர வேண்டும். நாம் பார்க்கும் இந்த ஹீரோ ஆள் மட்டும்தான் வளரவில்லை. ஆனால், அறிவும் பொறுப்புகளும் சராசரி மனிதர்களைவிட அதிகமாகவே வளர்ந்து இருக்கின்றன!
பெரியசாமியின் உயரம் ஒன்றே முக்கால் அடி மட்டுமே. தன் குடும்ப பொறுப்புகளை உணர்ந்து, தனக்கு இருக்கும் இசை ஆர்வத்தால் இசையை முறையாகக் கற்றுக்கொண்டு கச்சேரிகள் செய்து குடும்பத்தைக் காப்பாற்றிவருகிறார்.

.jpg)
பெரியசாமியைச் சந்தித்துப் பேசினேன். ''என் சொந்த ஊர் ஆத்தூர், தம்மம்பட்டி அருகே உள்ள நாயக்கர்பட்டி
கிராமம்.
நான்தான் வீட்டுக்கு மூத்த மகன். ஒரு தங்கச்சி இருக்கிறா. அப்பா, அம்மா கூலி
வேலைக்குப் போய்தான் எங்க ரெண்டு பேரையும் படிக்கவெச்சாங்க. எனக்கு இப்ப 16 வயசு
ஆகுது. நான் சின்ன வயசுல நல்லா, அழகா இருந்தேனு எங்க அம்மா சொல்வாங்க. அதனால்,
அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லோரும் தூக்கிட்டுப் போயிடுவாங்களாம். வயசு
கூடக் கூட ஆள் வளருவானானு பார்த்தாங்களாம். என் கூட்டாளிங்க எல்லாம் பனை மரம்
மாதிரி வளர்ந்துட்டாங்க. நான் ஒண்ணே முக்கால் அடிதான் வளந்தேன்.நாலைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அப்பா என்னைத் தூக்கிக்கிட்டு டாக்டர்கிட்ட போனார். என்னை பரிசோதித்த டாக்டர், 'தம்பி, இதுக்குமேல வளர வாய்ப்பு இல்லை... ஆனா, நிறைய புத்திக் கூர்மை இருக்கு... அவனுக்குப் பிடிச்ச துறையில சேர்த்துவிடுங்க. உயரமா வளராட்டியும் பெரிய ஆளாக வருவான்’னு சொன்னார். உயரம் குறைவாக இருக்கிறதுக்காக நான் என்னைக்குமே வருத்தப்பட்டது இல்லை. அப்பாவும் அம்மாவும்தான் வருத்தப்படுவாங்க. நான் போன வருஷம்தான் 10-வது படிச்சு முடிச்சேன்.
எனக்கு
கிரிக்கெட் ரொம்பப் பிடிக்கும். சாயந்திரம் வீட்டுக்கு வந்துட்டா, என்னோட
ஃப்ரெண்ட்ஸ்கூட கிரிக்கெட் ஆடுவேன். ஆனா, என்னைவிட பேட் உயரம்கிறதால சொந்தமாக ஒரு
சின்ன பேட் செஞ்சுக்கிட்டேன். பந்து எல்லோருக்கும் ஒண்ணுதான். நான் ஒன்பதாம்
வகுப்பு படிக்கும்போது எங்க பக்கத்து வீட்டு தாத்தா பறை அடிக்கக் கத்துக்
கொடுத்தார். அதில் இருந்து எனக்கு பறை அடிக்கிற ஆர்வம் அதிகமாகிடுச்சு. வீட்டில்
இருக்கும் சாப்பாட்டுத் தட்டையே பறை மாதிரி வெச்சு அடிச்சுட்டு இருப்பேன்.
'எனக்கு இசை கத்துக்க ரொம்ப ஆர்வமா இருக்கு' னு சொல்லி அம்மா, அப்பாவைக் கூட்டிட்டு
வந்து சேலம் கலெக்டரைப் பார்த்தேன். அவரும் 'எங்கே பறை அடிச்சுக் காட்டு’ன்னார்.
சூப்பரா அடிச்சிக் காட்டினேன். அவர் என்னை சேலம் அரசு இசைப் பள்ளியில்
சேர்த்துவிட்டாரு. மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையும் கொடுப்பதாகச் சொல்லி
இருக்காங்க.இப்போ மிருதங்கம் கத்துக்கிட்டு இருக்கேன். எனக்கும் வயசு ஆகுது. பொறுப்புகள் அதிகம் இருக்கு. என் தங்கச்சி பத்தாவது படிக்கிறா. அவ நல்லா படிப்பா. அவளை நிறைய படிக்கவெக்கணும். அப்பா, அம்மாவைப் பத்திரமா பார்த்துக்கணும். அதுக்கு நான் சம்பாதிச்சாதான் முடியும். அதனால்தான் இந்த மிருதங்கம், தபேலா கத்துக்கிட்டு இருக்கேன். கூடிய சீக்கிரத்தில் மிருதங்க வித்வானாக கச்சேரியில் என்னைப் பார்க்கலாம்'' என்கிறார் தன்னம்பிக்கையுடன்!


இசைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சங்கரராமன், ''என்றும் 16 வயது மார்கண்டேயன் மாதிரிதான் பெரியசாமி. எங்க பள்ளிக்கு வந்து ஒரு வாரம்தான் ஆகிறது. அதற்குள் ஐந்து தாளங்களுக்கு மேல் கற்றுக்கொண்டான். அதிகமான ஆர்வம் இருக்கிறது. ஆறு மாதத்தில் தாளம், ராகம், சங்கீதம் என்று அசத்தப்போகிறார். சொல்லப்போனா பெரியசாமிதான் எங்க பள்ளியின் ஸ்டார் கலைஞர். இறைவன் இவருக்கு எல்லா வரங்களையும் கொடுப்பார்'' என்றார் மகிழ்ச்சி பொங்க!
பெரியசாமி உயரங்களைத் தொட வாழ்த்துகள்!
No comments:
Post a Comment