Sunday, June 6, 2021

உயிர் உரங்கள்....

 💐மாடித்தோட்டத்தில் 

#உயிர்உரங்களை பயன்படுத்தி

 மகசூலைப் பெருக்குவோம்...💐


1.சூடோமோனஸ்

2.டைரைக்கோடெர்மா வெர்டி

3.பாஸ்போ பாக்டீரியா

4.அசோஸ்ஸ்பைரில்லம்


மாடித்தோட்டதில் செடி, 

கொடிகள் வளர்க்க 

மண் கலவை தயாரித்தல்

விதை நேர்த்தி செய்தல்,

தெளிப்பான் மூலம் தெளித்தல் போன்றவற்றிர்க்கு 

உயிர் உரங்களை

பயன்படுத்தி நல்ல மகசூல் பெறலாம்.


👍சூடோமோனஸ்..👍


சூடோமோனஸ்  என்பது செடி,கொடிகளின்

 இலைக்கருகல்

 இலைப்புள்ளி , 

குலைநோய், 

துருநோய், 

வாடல் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும் உயிர் பூஞ்சாணக் கொல்லியாகும்.

சூடோமோனஸ்  பயிர்களில் நோயை உண்டுபடுத்தம் பூஞ்சாணங்களை கட்டுப்படுத்தி நோய் வராமல் பாதுகாக்கின்றது இதனை எல்லா பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.


😀நன்மைகள்:😀


பயிர்களுக்கு தேவையான வளர்ச்சி யூக்கிகளை ( ஹார்மோன்கள்) உற்பத்தி செய்கிறது.

பயிர்களின் வேர்களைத் தாக்கும் நூற்புழுக்களை( நெமட்டோடு) கட்டுப்படுத்துகிறது


❤️பயன்படுத்தும் முறைகள்❤️:


அடியுரமாக போடலாம். தண்ணீருடன் கலந்து வேர்பகுதியில் ஊற்றலாம்.ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனஸைசிறிது நீர் தெளித்து கலந்து அரைமணி நேரம் நிழலில் உளர்த்தி பின்பு நடவு செய்யலாம்2 கிலோ சூபோமோனஸ்சை 200 கிலோ மக்கிய இயற்கை உரத்துடன் கலந்து 4 நாட்கள் நிழலில் காற்றுபுகாமல் மூடி வைத்தபிறகு; நிலத்தில் ஈரம் இருக்கும் பொழுது இடவும்.சூபோமோனஸ் ஒருகிலோ பவுடரை 100 லிட்டர் நீரில் கரைத்து தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலை வேளையில் பயிர் நனையுமாறு தெளிக்கலாம்.


👍டிரைக்கோடெர்மா விரிடி:👍


பயிர்களில் மண், நீர் விதையின் மூலம் பறவும் அழுகல் மற்றும் வாடல் நோய்களை கட்டுப்படுத்தும் இயற்கை பூஞ்சானக்கொல்லியாகும்.


😀நன்மைகள்:😀


டிரைக்கோடெர்மா விரிடி நோய்களை உண்டாக்கும் பூஞ்சானங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி வேருக்கு பாதுகாப்பு கவசமாக விளங்குகிறது. இதனை எல்லா பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.

பயிர்களில் உண்டாகும் வேரழுகல், நாற்றழுகல், வாடல் நோய்களை கட்டுப்படுத்தும் .பயிர்களுக்குத் தேவையான( ஹார்மோன்கள் ) உற்பத்தி செய்கிறது.

மண்ணில் உள்ள மக்காத குப்பைகளை எளிதாக, விரைவாக மக்க வைத்து உரமாக்குகின்றன. வேரின் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. இதனால் வேரின் செயல்திறன் அதிரிக்கிறது.


❤️பயன்படுத்தும் முறைகள்:❤️


அடியுரமாக போடலாம், விதைநேர்த்தி செய்யலாம், தண்ணீரில் கலந்து ஊற்றலாம். ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடியை 10 கிராம், நீர் தெளித்து கலந்து அரைமணிநேரம் நிழலில் உளர்த்தி பிறகு நடவு செய்யலாம்.டிரைக்கோடெர்மா விரிடி ஒரு ஏக்கருக்கு 2 முதல் 3 கிலோவை மண்புழு உரம் அல்லது இயற்கை உரம( சாணம்; உரம்) 100 கிலோவுடன் கலந்து 10- 15 நாட்கள் நிழலில் வைத்துப் பிறகு நிழத்தில் ஈரம் இருக்கும் பொழுது அடியுரமாக போடலாம்.டிரைக்கோடெர்மா விரிடியை ஒரு கிலோவை 100 லிட்டர் நீரில் கரைத்து வேர்பகுதியில் ஊற்றலாம்.


👍அசோஸ்பைரில்லம்:👍


அசோஸ்பைரில்லம் என்பது ஒரு உயிர் உரம் இது காற்றிலுள்ள தழைச்சத்தை கிறகித்து பயிருக்கு 20 முதல் 40 கிலோ தழைச்சத்தை கிடைக்க செய்யும். பாக்டீரியா இனத்தைச் சேர்ந்தது.


❤️பயன்படுத்தும் முறை ❤️


அசோஸ்பைரில்லத்தை அனைத்துபயிர்வகை மற்றம் செடி,கொடிகளுக்கும்

பயன்படுத்தலாம் .

குறிப்பாக நெல், கம்பு, சோளம், பருத்தி மற்றும் காய்கறிவகை பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.


😀நன்மைகள்:😀


பயிர்களின் மகசூல் 20 முதல் 25 சதவீதம் அதிகரிக்கிறது.இரசாயண உரத்தின் அளவு 25 சதம் குறைக்கிறது.மண்ணின் தன்மை பாதிக்கப்படாமல் பாதுகாத்து வளத்தை கூட்டுகிறது.விதை முளைப்புதறனை அதிகரிப்பதோடு பயிர்களுக்கு ஓரளவு வறட்சியைத்தாங்கும் தன்மையை அளிக்கிறது.


👍பாஸ்போ பாக்டீரியா:👍


பாஸ்போ பாக்டீரியா உயிர் உரம் இது மண்ணில் உள்ள கரையாத மணிச்சத்தை கரைத்து பயிர்கள் எடுத்துக் கொள்ளும் நிலையில் கொடுக்கிறது இது பாக்டீரியா இனத்தைச் சேர்ந்தது அனைத்துவகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.விதை நேர்த்தி செய்யலாம், நாற்று மற்றும் கிழங்குகளை நனைத்து நடலாம், அடியுரமாக போடலாம்.பாஸ்போபாக்டீரியா 20 கிராம் ஒரு கிலோ விதையுடன் நீர் தெளித்து கலந்து அரைமணி நேரம் நிழலில் உளர்த்தி பின்பு நடவு செய்யவும்.பாஸ்போபாக்டீரியாவை 2 கிலோவை 100 கிலோ மக்கிய உரத்துடன் கலந்து 5 நாட்கள் நிழலில் காற்றுபுகாமல் முடிவைத்து பிறகு நிழத்தில் ஈரம் இருக்கும்பொழுது தூவிவிடலாம்.பாஸ்போபாக்டீரியா அரைக் கிலோவை 15 முதல் 20 லிட்டர் நீரில் கரைத்து விடவும் பிறகு நாற்று, கிழங்கு வகைகளை நனைத்து நடவு செய்யலாம்.

Saturday, June 5, 2021

எடை குறைக்கும்... கடுக்காய்!


`காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டால் கோலை ஊன்றி குறுகி நடக்கும் கிழவனும், கோலை வீசி குலாவி நடப்பானே', `- இது சித்தர்கள் வாக்கு. `கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்', `ஈனாத மாட்டுக்கு ஒரு கடுக்காய்; இளம் பிள்ளைத்தாய்ச்சிக்கு ஏழு கடுக்காய்' போன்ற பழமொழிகளும் கடுக்காயின் மகத்துவத்தை எடுத்துரைக்கின்றன. 

  
`உடலை அழியாத் தன்மைக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றால், 60-க்கும் மேற்பட்ட காயகல்ப முறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக உடல், மனம், ஆன்மாவைத் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உள்ளது' என்று கூறும் திருமூலர் அதை `அமுதம்’ என்று குறிப்பிடுகிறார். அதாவது, `தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்துக்கு ஒப்பானது’ என திருமூலர் குறிப்பிட்டிருக்கிறார். 

கடுக்காய் தாய்க்கு அதிகம் காண் நீ - கடுக்காய் நோய் 
ஓட்டி உடல் தேற்றும் உற்ற அன்னையே சுவைகள் 
ஊட்டி உடல் தேற்றும் உவந்து' 
 
என்ற இன்னொரு மருத்துவப் பாடலும் கடுக்காயின் பெருமையைப் பறைசாற்றுகிறது.

கட்டுரையின் தொடக்கத்தில் சொன்ன பழமொழியின்படி காலையில் இஞ்சிச்சாறு, பகலில் (மாலை) சுக்குக் காபி, இரவில் உறங்கப்போவதற்கு முன்னர் விதை நீக்கிய கடுக்காயைத் தண்ணீர்விட்டு, கொதிக்கவைத்து அருந்த வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் உடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் அனைத்தும் நீங்கிவிடும். அதாவது மலச்சிக்கல் நீங்கும்; கபம் சமநிலைப்படும். இப்படி நோய்கள் நீங்குவதன் மூலம் கிழவனும் குமரனாகலாம் என்பதே அதன் பொருள். இதில் கடுக்காயின் பங்கு அதிகம்.

சித்தர்களின் கூற்றுப்படி கல்பங்கள் உடலுக்கு வலுவூட்டி, நீண்ட ஆயுளைத் தரக்கூடியவை. மொத்தம் 108 கல்பங்கள் உள்ளதாகவும், அவற்றைச் சாப்பிடுவதால் நோய் விலகும், பிற்காலத்தில் நோய் வராமல் தடுக்கும் என்கிறார்கள் சித்தர்கள். மேலும், உடல் செல்களைப் புதுப்பித்து, உடலை வலுவாக்கி, இளமையாக இருக்கச் செய்யும். இந்தப் பழமொழியில் சொல்லப்பட்ட கல்பங்களில் இஞ்சி, சுக்கு, கடுக்காய் ஆகியவற்றில் கல்பங்கள் செய்து 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரைநோய், இதயநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் கட்டுப்படும்; உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும். 


இஞ்சி, சுக்கு, கடுக்காயில் செய்யப்படும் கல்பங்கள் ஆண்-பெண் உறவைப் பலப்படுத்தி, குழந்தைப்பேறு தரக்கூடியவை. மணிக்கணக்கில் கம்ப்யூட்டரே கதி என்று ஒரே இருக்கையில் அமர்ந்து பணி செய்வதால், சிலர் ஆண்மைத்தன்மை குறைவதாகச் சொல்கிறார்கள். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த மூன்று கல்பங்களும் அருமருந்து. ஆண்களுக்கும் பெண்களுக்கும் உயிர் சக்தியை மீட்டுத்தந்து, குழந்தைப்பேறு கிடைக்கச் செய்யும். காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி கல்பம், மதிய உணவு உண்டபிறகு சுக்கு கல்பம், இரவில் கடுக்காய் கல்பம் என 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால், அடுத்த சில மாதங்களில் குழந்தைப்பேறு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த 48 நாள்களில் கருமுட்டை உடையும் நாள்களில் மட்டும் தம்பதிகள் சேரலாம். மற்றபடி ஃபாஸ்ட்ஃபுட் உணவுகளைச் சாப்பிடாமல் கம்பு, கேழ்வரகு, வெங்காயம், முருங்கைப்பூ போன்றவற்றை சேர்த்துக்கொள்வது நல்லது.

இஞ்சி கல்பம் 
இஞ்சி கல்பம் செய்ய அரை கிலோ இஞ்சியும் கால் லிட்டர் சுத்தமான தேனும் தேவை. இஞ்சியை நன்றாகக் கழுவி, தோல் நீக்கி, சிறு துண்டுகளாக்கி மையாக அரைக்கவும். அப்படி அரைத்த விழுதைப் பிழிந்து, சாறு எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றிப் படியவிடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து தெளிந்த நீரை மட்டும் வடிகட்டிக்கொள்ள வேண்டும். பாத்திரத்தின் அடியில் படிந்திருக்கும் வெள்ளை நிற நச்சுப்பொருளை அகற்றிவிட வேண்டும். 

தெளிந்த இஞ்சிச் சாற்றில் நன்றாகப் பழுத்த இரும்புக்கம்பியை ஒரு நிமிடம் முக்கி எடுக்க வேண்டும். மீண்டும் வடிகட்டி அந்த இஞ்சிச் சாற்றுடன் தேனைக் கலந்து, கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, ஃபிரிட்ஜில் வைத்துவிட வேண்டும். இதுதான் நச்சு நீக்கிய இஞ்சி கல்பம். இதில் இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து 100 மி.லி தண்ணீருடன் கலந்து அதிகாலையில் குடிக்க வேண்டும். (ஃபிரிட்ஜில் வைத்திருப்பதால் தேவையான கல்பத்தை மட்டும் வெளியே எடுத்துவைத்து பயன்படுத்தவும்.)

இஞ்சி கல்பம், பித்தத்தைச் சமப்படுத்தும். செரிமானக் கோளாறுகள், வயிற்றுக்கோளாறுகள், தலை கிறுகிறுப்பு போன்றவற்றைப் போக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும். மாரடைப்பு மற்றும் இதயநோய்களைக் கட்டுப்படுத்தும். 


சுக்கு கல்பம் 
சுக்கு கல்பம் செய்ய கால் கிலோ சுக்கு, 25 கிராம் சுண்ணாம்பு, ஒரு லிட்டர் தண்ணீர் தேவை. தண்ணீரில் சுண்ணாம்பைக் கரைத்து, அதில் சுக்கை ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு வெயிலில் நன்றாக உலரவைக்க வேண்டும். சுக்கின் மீது படிந்திருக்கும் சுண்ணாம்பை அகற்றிவிட்டு, அதைச் சிறு சிறு துண்டுகளாக்கி, மிக்ஸியில் பொடியாக அரைத்து, பாட்டிலில் போட்டுவைக்கவும். இதுதான் சுக்கு கல்பம். மதிய உணவுக்குப் பிறகு, இதில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து பருகலாம். தேவைப்பட்டால் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துப் பருகலாம்.

இது சுரப்பிகளைச் சமநிலைப்படுத்தும்; வாய்வுத் தொல்லைகளைப் போக்கும். வாதம் தொடர்பான நோய்களையும் போக்கும்.

கடுக்காய் கல்பம் 
கடுக்காய் கல்பம் செய்ய அரை கிலோ (மஞ்சள் நிற) கடுக்காய், அரை லிட்டர் பசும்பால் தேவை. பாலில் கடுக்காயைப் போட்டு, அடுப்பில்வைத்து கால் மணி நேரம் காய்ச்சவும். சூடு ஆறியதும் இறக்கி, கடுக்காயை மட்டும் வெயிலில் உலரவைக்கவும். மூன்று நாள்கள் உலரவைத்த பிறகு, இதை விதையுடன் மிக்ஸியில் அரைத்து, கண்ணாடி பாட்டிலில் எடுத்துவைக்கவும். கடுக்காயின் விதை நச்சு. ஆனால், அதைப் பால் ஊற்றிக் காய்ச்சியதன் மூலம் நச்சு விலகி, கல்பமாகிவிடும்.  
இந்தக் கடுக்காய் கல்பத்தை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து, இரவு உணவுக்குப் பின்னர் அருந்தலாம். மற்ற கல்பங்களைப்போல அல்லாமல் கடுக்காய் கல்பத்தை மட்டும் பல ஆண்டுகளுக்குச் சாப்பிடலாம். 


கடுக்காய் லேகியம் 
கடுக்காய் லேகியம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதைச் சிலர் கிண்டலாகச் சொல்வதும் உண்டு. உண்மையில் கடுக்காய் லேகியம் சாப்பிடுவதால், நரைத்த தலைமுடிகூட கருகருவென வளரும். முற்காலங்களில் கட்டப்பட்ட கட்டடங்கள் உறுதியாக இருக்க ,கடுக்காய் சேர்த்துக் கட்டப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சித்த மருத்துவ நூல்களில் கடுக்காய் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை விதையை நீக்கிவிட்டுப் பயன்படுத்த வேண்டும். 

கடுக்காயில் பலவகைகள் உள்ளன. அதில் பிஞ்சுக் கடுக்காய் மலச்சிக்கலைப் போக்கும். மலத்தை இளக்கும்; உடலுக்கு அழகூட்டி, மெருகூட்டும். செங்கடுக்காய் காசநோயைப் (டி.பி) போக்கி மெலிந்த உடலைத் தேற்றி அழகாக்கும். வரிக்கடுக்காய் பல்வேறு நோய்களை விரட்டும்; விந்தணுக்களை அதிகரிக்கச் செய்யும்.

இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் ஐந்து கிராம் கடுக்காய்த் தூளை எடுத்து, வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். இஞ்சி, சுக்கு, கடுக்காயை ஒரு மண்டலம் (48 நாள்கள்) சாப்பிட்டுவந்தால் செரிமானக் கோளாறுகள் விலகும்; மலச்சிக்கல் குணமாகும். 
கடுக்காய்த்தூளுடன் சிறிதளவு சோம்பு (பெருஞ்சீரகம்) சேர்த்து மண் சட்டியில் தண்ணீர்விட்டு நன்றாகக் காய்ச்சி, வடிகட்ட வேண்டும். அதனுடன் சுத்தமான தேன் கலந்து தினமும் இரண்டு வேளை குடித்துவந்தால் உடல் எடை குறையும். 

மூன்று கடுக்காய்த் தோல்களுடன் தேவையான அளவு இஞ்சி, மிளகாய், புளி, உளுந்து சேர்த்து நெய்யில் வதக்கி உப்பு சேர்த்து துவையலாக அரைக்கவும். இதைச் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டுவந்தால் செரிமான சக்தி அதிகரிக்கும்; மலச்சிக்கல் விலகும்; உடல் பலம் பெறும். 
இப்படிப் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் கடுக்காய், உடல் பலவீனத்தைப் போக்கும்; ஆண்களின் உயிரணு குறைபாடுகளை நீக்கி என்றும் இளமையான தோற்றத்தைத் தரும். 

பொதுவாக, மலச்சிக்கல் இல்லாமல் இருந்தாலே மனிதனின் அத்தனை செயல்பாடுகளும் சரியாக இருக்கும். தாம்பத்யக் குறைபாடு இல்லாமல் இருந்தாலே போதும். தம்பதியரின் வாழ்வு சிறப்பாக இருக்கும். இந்த அற்புதமானப் பணிகளை மிகச் சிறப்பாகச் செய்யக்கூடியது கடுக்காய்!

பஞ்சகவ்யம்

பஞ்சகவ்யம் எப்படி தயாரிக்கணும்? எப்படி பயன்படுத்துணும்? தெரிஞ்சுக்க இதை வாசிங்க...

பஞ்சகவ்யம் 

பஞ்சகவ்யம் என்பது பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களால் உருவாக்கப்படும் ஒரு உயிரி நீர்மக்கலவை. இது இயற்கை வேளாண்மையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிலஊட்டப் பொருள்(உரம்) ஆகும். பஞ்சகவ்யம் – பஞ்ச என்றால் ஐந்து மற்றும் கவ்யம் என்றால்

பசுவிடமிருந்து என பொருள்படும். பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்களான சாணம், கோமியம், பால், நெய், தயிர் ஆகிய ஐந்தையும் சரியான விதத்தில் கலந்து தயாரிக்கப்படுவதே பஞ்சகவ்யம். 

பயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

தயாரிப்பு முறை

தேவையான பொருட்கள்

1. பசுஞ்சாணம்-5 கிலோ,

2. பசுவின் கோமியம்-3 லிட்டர்,

3. பசும்பால்-2 லிட்டர்,

4. பசு தயிர்-2 லிட்டர்,

5. பசு நெய்-1 லிட்டர்,

6. கரும்புச்சாறு-1 லிட்டர்,

7. தென்னை இளநீர்-1 லிட்டர்,

8. வாழைப்பழம்-1 கிலோ.

பசுஞ்சாணம் 5 கிலோவுடன் பசுமாட்டு நெய் 1லிட்டர் கலந்து பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் 3 நாட்கள் வைத்து தினமும் ஒரு முறை பிசைந்துவிட வேண்டும்.

• 4வது நாள் மற்ற பொருட்களுடன் இவைகளை ஒரு வாயகன்ற மண்பானை அல்லது சிமென்ட் தொட்டி அல்லது பிளாஸ்டிக் தொட்டியில் இட்டு கையால் நன்கு கரைத்து கம்பிவலையால் மூடி நிழலில் வைக்க வேண்டும்.

• ஒரு நாளைக்கு 2 முறை வீதம் காலையிலும் மாலையிலும் 20 நிமிடங்கள் நன்றாக கலக்கிவிட வேண்டும். இது பிராண வாயுவை பயன்படுத்தி வாழும் நுண்ணுயிர்களின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இந்த முறையில் 15 நாட்களில் பஞ்சகவ்யம் தயாராகிவிடும்.

பயன்படுத்தும் முறை

ஏக்கருக்கு 200 லிட்டர் வீதம் கைத்தெளிப்பான் கொண்டு பயிர்களுக்கு தெளிக்கலாம்...

மண்ணீரல்

மண்ணீரல் வீக்கத்திற்கான அறிகுறியும்.. அதை சரிசெய்ய உதவும் சில இயற்கை வழிகளும்...

கல்லீரல் அழற்சி நோய்கள், இரத்த நோய்கள் மற்றும் நிணநீர் மண்டலத்தில் உள்ள பிரச்சனை போன்றவைகள் தான் மண்ணீரல் வீங்கி பெரிதாகி இருப்பதற்கான முக்கிய காரணங்களாகும். ஒருவரது உடலில் உள்ள மண்ணீரலில் பணி என்னவென்று தெரியுமா? அது தான் இரத்தத்தை வடிகட்டி, சிவப்பு மற்றும் வெள்ளை இரத்தணுக்களைப் பராமரிப்பதாகும். அதோடு உடலைத் தாக்கும் நோய் கிருமிகளிடமிருந்து பாதுகாப்பு வழங்கும் முக்கிய பணியையும் செய்கிறது.

இத்தகைய மண்ணீரல் வீங்கி இருந்தால், அதனால் சரியாக செயல்படாமல் போவதுடன், இரத்த செல்களை அழிக்கவும் செய்யும். மண்ணீரல் வீக்கத்தை ஒருசில அறிகுறிகள் கொண்டு அறிந்து கொள்ள முடியும். அந்த அறிகுறிகள் அனைத்தும் அன்றாடம் நாம் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகள் போன்று தான் இருக்கும். ஆனால் இது அப்படியே நீடித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

மண்ணீரல் வீக்கம் மிகவும் தீவிர நிலையில் இருந்தால், மருத்துவர்கள் அதனை அகற்றும் படி கூறுவார்கள். ஒருவரது உடலில் இருந்து மண்ணீரலை அகற்றிவிட்டால், பின் உடலால் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட முடியாமல், அடிக்கடி உடல்நல குறைவால் அவஸ்தைப்படக்கூடும். எனவே கவனமாக இருங்கள்.

இக்கட்டுரையில் மண்ணீரல் வீக்கத்திற்கான அறிகுறியும், அதனை இயற்கை வழியில் சரிசெய்யும் சில எளிய வழிகளை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மண்ணீரல் வீக்கத்திற்கான அறிகுறிகள்:

* எடை குறைவு

* மஞ்சள் காமாலை

* மூக்கு அல்லது வாயில் இருந்து இரத்தக்கசிவு

* களைப்பு

* இரத்த சோகை

* மலம் கழிக்கும் போது கடுமையான வயிற்று வலி

* பசியின்மை

* வலது பக்க அடிவயிற்றின் மேல் பகுதியில் வலி

* மூச்சு விடுவதில் சிரமம்

இப்போது மண்ணீரல் வீக்கத்தை சரிசெய்ய உதவும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.

வழி #1

இரவில் படுக்கும் முன் ஆப்பிள் சீடர் வினிகரில் பப்பாளி காயை ஊற வைத்து, மறுநாளை காலையில் அதை துண்டுகளாக்கி, அதன் மேல் 6 கிராம் உப்பைத் தூவி சாப்பிடுங்கள். இதனால் வீங்கிய மண்ணீரல் அதன் பழைய நிலைக்கு இயற்கையாகவே மாறும்.

வழி #2

வீங்கி இருக்கும் மண்ணீரலை சரிசெய்வதற்கான மற்றொரு சிறப்பான ஓர் உணவுப் பொருள் தான் நாவல் பழம். இதனால் மண்ணீரல் வீக்க பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

வழி #3

இயற்கை வெண்காரம் 12 கிராம் மற்றும் கடுகு விதை 20 கிராமை பொடி செய்து கொள்ள வேண்டும். பின் தினமும் இரண்டு வேளை 1 கிராம் என்ற கணக்கில் உட்கொண்டு வர, மண்ணீரல் வீக்கம் குறையும்.

வழி #4

தினமும் 1-2 டம்ளர் நற்பதமான ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால், நிணநீர் மண்டலம் சுத்தமாவதோடு, வீங்கிய மண்ணீரலும் இயற்கையாக குறைய ஆரம்பிக்கும். மேலும் ஆப்பிள் ஜூஸை தினமும் குடிப்பதால், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்பட்டு, நோய்த்தாக்கம் குறையும்.

வழி #5

தினமும் 3-4 லிட்டர் நீரில் 2-3 டேபிள் ஸ்பூன் சோம்பு மற்றும் 1/2 டீஸ்பூன் ஓமம் சேர்த்து கலந்து, தினமும் சாதாரண நீருக்கு பதிலாக இந்த நீரைக் குடிப்பதால், மண்ஷீர் வீக்கம் சரியாகும்.

வழி #6

1 கப் பீட்ரூட் ஜூஸ் உடன் 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி சாறு சேர்த்து கலந்து, தினமும் 2-3 முறை குடிப்பதால், மண்ணீரல் நன்கு செயல்படுவதோடு வலிமையாகவும் செய்யும்.

வழி #7

தினமும் 200-250 கிராம் பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம், மண்ணீரல் வீக்கம் மற்றும் அழற்சி போன்றவை சரியாகும். மேலும் மண்ணீரலால் ஏற்படும் வலியும் நீங்கும். இப்படி பப்பாளியை சாப்பிட்டால், மண்ணீரல் இரத்த செல்களில் இருந்து பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவும்.

வழி #8

ஒருவரது மண்ணீரல் ஆரோக்கியம் பாழாவதற்கு முறையற்ற உணவுப் பழக்கம் முக்கிய காரணமாகும். எனவே தினமும் சரிவிகித டயட்டை மேற்கொள்வதன் மூலம், மண்ணீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

வழி #9

ஏற்கனவே வயிற்று வலியை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது, செரிமானமாவதற்கு கடினமாக இருக்கும் பொருட்களான இறைச்சி உண்பதைத் தவிர்த்திடுங்கள். இதனால் மண்ணீரல் வீக்கம் குறைவதோடு, வலியும் போய்விடும்.

வழி #10

மண்ணீரல் வீக்கம் இருப்பவர்கள், தக்காளியை அறவே தவிர்க்க வேண்டும். இத்தகையவர்கள் தக்காளி சேர்த்த உணவை அறவே தவிர்த்தாக வேண்டும். இதில் உள்ள விதை ஏற்கனவே வீங்கியுள்ள மண்ணீரலின் நிலைமையை மோசமாக்கிவிடும்.

வழி #11

புரோட்டீன் மற்றும் கொழுப்புக்கள் ஏராளமாக நிறைந்த மாட்டிறைச்சியை எப்போதும் தொடக்கூடாது. மேலும் புரோட்டீன் நிறைந்த உணவுகளை ஒரே வேளையில் அதிகமாக சாப்பிடும் பழக்கத்தைத் தவிர்க்கவும் வேண்டும்.

வழி #12

மது அருந்துவதை அறவே தவிர்க்க வேண்டும். அதோடு நிக்கோட்டின் மற்றும் கார்போனேட்டட் பானங்கள் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். இதனால் மண்ணீரலின் நிலைமை மோசமாவதோடு, எதிர்பார்க்காத தீவிர விளைவை சந்திக்க நேரிடும். எனவே இதை கட்டாயம் செய்ய வேண்டும்.

வழி #13

நார்ச்சத்து அதிகம் நிறைந்த தானியங்கள், பீட்ரூட், கேரட் மற்றும் கீரை வகைகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால், மண்ணீரல் வீக்கத்தைத் தவிர்க்கப்படுவதோடு, அதன் ஆரோக்கியம் மேம்படவும் ஆரம்பிக்கும்.

வழி #14

மிகவும் சூடான உணவுகளை எப்போதும் உட்கொள்ளக்கூடாது. சூடான உணவுகள் மண்ணீரல் வீக்கத்தை மோசமாக்கும். எனவே வெதுவெதுப்பான நிலையில் எதையும் உட்கொள்ளுங்கள்.

வழி #15

குடைமிளகாயில் உள்ள வைட்டமின் சி, மண்ணீரல் வீக்கத்தை சரிசெய்வதோடு, அதில் உள்ள இதர வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் மண்ணீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.